மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட்னைட் மற்றுன் லவ்வர் ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறது.
இந்த படம் ரிலீஸாகி 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் கணிசமான வசூலைத் தக்கவைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட பிரபலங்களில் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இப்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் அடுத்தடுத்துப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே படத்தைப் பாராட்டி ராஜமௌலி பதிவிட்ட நிலையில் இப்போது நானி படம் குறித்து பேசியுள்ளார். அதில் “நிறைய நேர்மறையான அம்சங்கள் கொண்ட, எளிமையான, மனதுக்கு இதமானப் படங்கள்தான் நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த உணர்வை டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கொடுத்துள்ளது. இப்படி ஒரு படத்தைக் கொடுத்த குழுவினருக்கு நன்றி. மிகவும் தேவையான படம்” எனக் கூறியுள்ளார்.