தென்னிந்திய சினிமாவில் நன்கறியப்பட்ட நடிகராக இருக்கிறார் உன்னி முகுந்தன். மலையாளப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான மார்கோ திரைப்படம் கண்டனங்களைப் பெற்றாலும், வசூலை வாரிக் குவித்தது.
தமிழிலும் அவர் சூரியின் கருடன் படத்தில் வில்லனாக நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் மேலாளர் விபின் தற்போது தன் மீது வன்முறையை செலுத்தியதாக தொடர்ந்த வழக்கால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இது சம்மந்தமாக விபின் கொடுத்த புகாரில் “சமீபத்தில் ரிலீஸான டோவினோ தாமஸின் நரிவேட்ட படத்தைப் பாராட்டி நான் முகநூலில் பதிவிட்டதால் என்னை உன்னி முகுந்தன் சரமாரியாகத் தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டினார்” எனத் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக உன்னி முகுந்தன் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நரிவேட்ட திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.