Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்த மகளை கையில் ஏந்தியபடி நடிகர் நகுல் நெகிழ்ச்சி பதிவு!

பிறந்த மகளை கையில் ஏந்தியபடி நடிகர் நகுல் நெகிழ்ச்சி பதிவு!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:16 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

இந்நிலையில் தற்போது தனது குட்டி மகளை கையில் ஏந்தியிருக்கும் அழகிய புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு" என் மகள் இந்த உலகத்திற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஒரு வாரம் மிக வேகமாக பறந்துவிட்டது.  நாங்கள் எப்போதும் காட்டக்கூடியதை விட அதிகமாக உன்னை நேசிக்கிறோம்! என கூறி இப்படி ஒரு இளவரசியை கொடுத்த மனைவி ஸ்ருதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி!