Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாக்சியுடன் செல்பி எடுத்த பின் அபிராமி பதிவு செய்த டுவீட்

சாக்சியுடன் செல்பி எடுத்த பின் அபிராமி பதிவு செய்த டுவீட்
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:42 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து சாக்சி மற்றும் அபிராமி ஆகிய இருவரும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறிய நிலையில் இன்று இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.
 
நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி முதலில் தான் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்தார். திரையரங்கில் அஜித் ரசிகர்கள் பலருடன் செல்பி எடுத்து கொண்ட அபிராமி, அதன்பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து இதற்கு முன் வெளியேறிய ஒருசில போட்டியாளர்களை பார்த்துள்ளார். குறிப்பாக மோகன் வைத்யா வீட்டிற்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இணைபிரியாத தோழிகளாக இருந்த சாக்சியை சந்தித்த அபிராமி, அவருடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து அதில், செஸ்க்கி... பாப்பா பாடும் பாட்டு வெளியேறியதற்கு பிறகு இவரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. முன்னதாக அபிராமி நேற்று தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Seskyyyyy.... "papa paadum paatu " - meeting this one after a bindasss exit of ours...

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டும்" காதலிக்கிறாரா அக்‌‌ஷரா ஹாசன்?