Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த நாளில் ஆரி செய்த நெகிழ்ச்சியான செயல்!

பிறந்த நாளில் ஆரி செய்த நெகிழ்ச்சியான செயல்!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:34 IST)
பிறந்த நாளில் ஆரி செய்த நெகிழ்ச்சியான செயல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் பொதுமக்களின் பாராட்டுகளையும் ரசிகர்களை வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இன்று அவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று காலை முதல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது பிறந்தநாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியது நெகழ்ச்சியாக இருந்தது 
 
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற ஆரி அந்த மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு இனிப்பு வழங்கி தனது பிறந்தநாளை அந்த குழந்தைகளுடன் கொண்டாடினார். புற்று நோயாளிகள் மட்டுமின்றி உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளையும் அவர் சந்தித்து பிறந்த நாள் பரிசு வழங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் நாயகியாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகரின் மகள்!