Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (09:10 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அதே போல ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள அமீர்கான் “ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் மேல் எனக்கு நிறைய மதிப்பு உள்ளது. லோகேஷ் வந்து ‘இது ரஜினி சார் படம்’ என்று சொன்னதும் கதையைக் கேட்காமலே நடிக்க ஒத்துக் கொண்டேன்.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

கைவிடப்படுகிறதா விக்ரம்-மடோன் அஸ்வின் இணையவிருந்த படம்?

சினிமாவில் நான் சந்தோஷமாக இல்லை… சீக்கிரம் வெளியேறிவிடுவேன் –மிஷ்கின் பேச்சு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments