Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிடப்படுகிறதா விக்ரம்-மடோன் அஸ்வின் இணையவிருந்த படம்?

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (08:55 IST)
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.

இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை மாவீரன் படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பாக அருண் விஷ்வா தயாரிக்கிறார்.

இந்த படம் ஏப்ரல் மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை படம் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த படத்துக்காக மடோன் அஸ்வின் சொன்ன கதையில் விக்ரம்முக்கு முழு திருப்தி இல்லை என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மற்றொரு காரணமாக விக்ரம்மின் முந்தைய படங்களின் தோல்வியால் அவரின் மார்க்கெட் மதிப்பை விட படத்தின் செலவு அதிகமாகிறது என்பதால் தயாரிப்பாளர் அவரின்  சம்பளத்தைக் குறைக்க சொல்வதாக சொல்லப்படுகிறது. அதற்கு விக்ரம் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments