Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோல்டன் க்ளோப் விருது பெற்ற நாட்டு கூத்து… முதல் ஆளாக வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்!

கோல்டன் க்ளோப் விருது பெற்ற நாட்டு கூத்து… முதல் ஆளாக வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்!
, புதன், 11 ஜனவரி 2023 (09:31 IST)
கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த படம் இப்போது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள நிலையில் கோல்டன் க்ளோப் விருது விழாவில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில்’  ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருது பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த விருதை பெறும் முதல் பாடலாக சாதனை படைத்துள்ளது நாட்டு கூத்து பாடல்.

இதையடுத்து இந்தியாவில் இருந்து ஏற்கனவே கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் ஆகிய விருதுகளைப் பெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் படக்குழுவினரைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாரியில் இருந்து கீழே விழுந்து விபத்து…. துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் பலி!