Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்றாவது நாளில் சிறப்பான தொடக்கம்… சதமடிப்பாரா சுந்தர்?

மூன்றாவது நாளில் சிறப்பான தொடக்கம்… சதமடிப்பாரா சுந்தர்?
, சனி, 6 மார்ச் 2021 (10:12 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட்டின் மூன்றாம் நாளில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா நிதானமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். கில், புஜாரா மற்றும் கோலி ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

ரோஹித் ஷர்மா 49 ரன்களில் ஆட்டமிழக்க, பண்ட் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட்  அதிரடியாக 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் பந்தில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது. வாசிங்க்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 89 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று முன்றாம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விக்கெட்டை இழக்காமல் இந்திய வீர்ரகளான சுந்தர் மற்றும் அக்ஸர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது 323 ரன்கள் சேர்த்துள்ளது. 73 ரன்கள் சேர்த்துள்ள சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி