Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி

இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி
, வெள்ளி, 5 மார்ச் 2021 (22:04 IST)
இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி இன்று நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்பட ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சேவாக் இன்றும் தனது அதிரடியை காட்டியுள்ளார்
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவருமே இந்த போட்டியை முடித்து விட்டனர் என்பதும், சேவாக் அதிரடியாக 35 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய அணி 90 ரன்கள் முன்னிலை