Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

36 வயது ரஞ்சி வீரர் கொரோனாவுக்கு பலி… ஆகாஷ் சோப்ரா டிவீட்!

Advertiesment
36 வயது ரஞ்சி வீரர் கொரோனாவுக்கு பலி… ஆகாஷ் சோப்ரா டிவீட்!
, வெள்ளி, 7 மே 2021 (08:23 IST)
ரஞ்சி கோப்பை முன்னாள் வீரர் விவேக் யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பைகளில் விளையாடியுள்ளவர் விவேக் யாதவ். இவர் ராஜஸ்தான் அணி ரஞ்சி கோப்பையை வென்ற போது முக்கியப் பங்காற்றியவர். இதுவரை 18 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விவேக் யாதவ், 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பதிவிட்ட டிவிட்டில் ‘விவேக் யாதவ் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலத்தீவு சென்ற ஐபிஎல் வீரர்கள்...ஏன் தெரியுமா?