Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா அச்சம் குறையட்டும் அப்புறம் பாத்துக்கலாம்… சூர்யா கருத்தால் சன் பிக்சர்ஸ் அப்செட்!

கொரோனா அச்சம் குறையட்டும் அப்புறம் பாத்துக்கலாம்… சூர்யா கருத்தால் சன் பிக்சர்ஸ் அப்செட்!
, வெள்ளி, 7 மே 2021 (08:03 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சூர்யா மறுத்து விட்டாராம்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தது. ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை விறுவிறுப்பாக இயக்கி வந்தார் பாண்டிராஜ்.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொள்ளும் படி சூர்யா அறிவுறுத்திவிட்டாராம். ஏற்கனவே அவர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சையில் தேறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் இந்த முடிவால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பாலிவுட் நடிகர்தான் விஜய்க்கு வில்லனாம்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!