Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

Advertiesment
Arshdeep singh

Siva

, செவ்வாய், 3 ஜூன் 2025 (21:41 IST)
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எட்டியுள்ளது. 
 
அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஜிதேஷ் 10 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார் என்பதும், ஷெப்பர்ட் ஏழு பந்துகளில் 17 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் பந்துவீச்சை பொருத்தவரை, அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து, ஆர்சிபி அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார். ஜேமிசன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பஞ்சாப் அணி தற்போது 191 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. அந்த அணி வெற்றி பெறுமா? கோப்பையை கைப்பற்றுவது யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!