Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19 வயதுக்கு பின் மீண்டும் அரையிறுதியில் மோதும் விராத்கோஹ்லி-வில்லியம்சன்

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (20:13 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. ஜூலை 9ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதியும் ஜூலை 11ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதியும் நடைபெறவுள்ளது
 
இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதியது. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக வில்லியம்சனும் இருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதுடன் கோப்பையையும் வென்றது. 
 
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த அதே மேஜிக் இந்த ஆண்டும் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்த நாளில் மகள் ஸிவாவுடன் ஆட்டம் போட்ட தல தோனி