Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வுட்டன் ஸ்பூன் - கோஹ்லியைக் கலாய்த்த விஜய் மல்லையா !

வுட்டன் ஸ்பூன் - கோஹ்லியைக் கலாய்த்த விஜய் மல்லையா !
, புதன், 8 மே 2019 (10:36 IST)
ஆர்.சி.பி அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை வுட்டன் ஸுபூன் எனக் கூறி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆர்.சி. பி. அணிக்கு மிக மோசமாக முடிந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையேப் பெறமுடிந்தது. இது குறித்து ஆர்.சி.பி அணியின் கேப்டன் கோஹ்லி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் கடைசி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்றுள்ளோம். இது பெருமைப்படக் கூடியதே என கூறியிருந்தார்.

இதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ’ பெரிய லைன் அப் என்பது காகிதத்தில் மட்டுமே. வுட்டன் ஸ்பூன் பரிசினால் மனம் உடைந்து போனேன். ’ எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வுட்டன் ஸ்பூன் என்பது போட்டிகளில் கடைசி இடம் வருவோர்க்கு கொடுக்கப்படும் கிண்டலானப் பரிசு போன்றது.

விஜய் மல்லையா வங்கி ஊழல் சம்மந்தமாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று இப்போது இங்கிலாந்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆகவேண்டும் – தோல்விக்குப் பின் தோனி !