Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரோ கபடி 2019: ஒரே புள்ளிகளில் 3 அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்?

புரோ கபடி 2019: ஒரே புள்ளிகளில் 3 அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்?
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (23:06 IST)
புரோ கபடி போட்டி தொடரில் இன்றைய இரண்டு போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் உத்தரப்பிரதேசம், பெங்களூரு, மற்றும் மும்பை ஆகிய மூன்று அணிகளும் 53 புள்ளிகள் பெற்று ஒரே புள்ளிகளில் இருப்பதால் இந்த மூன்று அணிகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது
 
 
வழக்கம்போல் டெல்லி அணி முதலிடத்திலும் பெங்கால் இரண்டாவது இடத்திலும் அரியானா மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு மற்றும் உபி ஆகிய மூன்று அணிகளில்  ஏதாவது ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டி ஹரியானா மற்றும் பாட்னா அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஹரியானா அணி 39 புள்ளிகளும் பாட்னா அணி 34 புள்ளிகளும்  எடுத்ததை அடுத்து ஹரியானா அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 39 புள்ளிகள் எடுத்ததால் போட்டி போட்டி டிராவில் முடிந்தது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்காம் இடத்தில் பண்ட், ஸ்ரேயாஸ் இருவரும் இறங்கப்பார்த்தார்கள் – கோஹ்லி சொன்ன சுவாரஸ்யமான சம்பவம் !