Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலிடத்தை நெருங்கிய பெங்கால்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது!

முதலிடத்தை நெருங்கிய பெங்கால்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது!
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:18 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்கால் மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன 
 
 
நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 31 புள்ளிகளும் குஜராத் அணி 25 புள்ளிகள் எடுத்ததை அடுத்து மும்பை அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
இதனை அடுத்து நடைபெற்ற ஜெய்ப்பூர் மற்றும் பெங்கால் அணிகளின் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. ஆரம்பம் முதலே யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் இறுதியில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. பெங்கால் அணி 41 புள்ளிகளும் ஜெய்ப்பூர் அணி 40 புள்ளிகளும் எடுத்தது இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் முடிவில் 68 புள்ளிகளுடன் பெங்கால் இரண்டாம் இடத்திலும் 69 புள்ளிகளுடன் டெல்லி முதல் இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு புள்ளிகள் எடுத்தால் பெங்கால் அணி முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஹரியானா, மும்பை, உத்தர பிரதேசம், ஆகிய அணிகள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீகாக் அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி: தொடர் சமன் ஆனது