Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று 3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்திய அணி?

இன்று 3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்திய அணி?
, வெள்ளி, 23 ஜூலை 2021 (07:37 IST)
இன்று 3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி வாஷ் அவுட் ஆகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இலங்கை வீரர்கள் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வாட்ஸ்அவுட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்பாவே அணியை பந்தாடிய பங்களாதேஷ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!