Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாக எண்ணப்பட்டதா?

இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாக எண்ணப்பட்டதா?
, வியாழன், 22 ஜூலை 2021 (14:01 IST)
இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் மிகவும் குறைவாகவே கணக்கில் கொள்ளப்பட்டன என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை இந்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது.

 
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நிகழ்ந்த மரணங்கள் குறைவாகவே எண்ணப்பட்டன என்று துறைசார் வல்லுனர்களும், ஆய்வாளர்களும் கூறிய வருகின்றனர். அவை ஊடகங்களில் தொடர்ந்து செய்தியாகவும் வெளியாகின்றன.
 
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த கூடுதல் மரணங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக நிகழ்ந்தவை என்று கூறுவது மிகவும் தவறானது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் நிகழும் விகிதம், இந்தியாவில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கிடப்பட்டு இந்தியாவில் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு - HCL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!