Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிப் பெறுவது என்பதையே மறந்துவிட்டார்கள்… இலங்கை அணியை சாடிய முரளிதரன்!

வெற்றிப் பெறுவது என்பதையே மறந்துவிட்டார்கள்… இலங்கை அணியை சாடிய முரளிதரன்!
, வியாழன், 22 ஜூலை 2021 (17:50 IST)
இலங்கை அணியின் படுதோல்விக்கு அந்த அணியின் முத்தையா முரளிதரன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 69 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய தீபக் சஹார் வெற்றிக்கு வித்திட்டார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை சந்தித்த நிலையில் போராடி வெற்றி பெற்றது. இந்நிலையில் இலங்கை அணியின் தோல்வி குறித்து பலரும் காரசாரமான விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுபற்றி முத்தையா முரளிதரன் ‘பல ஆண்டுகளாக இலங்கை அணி வெற்றி பெறுவது எப்படி என்பதையே மறந்துவிட்டார்கள். இனி வரும் காலம் இலங்கை அணிக்குக் கடினமான காலமாக இருக்கும். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு போட்டியைக் கூட வெல்வது எவ்வாறு என்பது தெரிந்திருக்கவில்லை.’ எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!