Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

Siva
செவ்வாய், 27 மே 2025 (07:49 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சூர்யகுமார் யாதவ், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 
இப்போட்டியில் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்து 57 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு இந்த சீசனில் 5வது அரைசதம் ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 156.15 ஆக இருந்தது.
 
இந்த அரைசதத்துடன் சூர்யகுமார், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் 25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்த ஒரே ஆட்டகாரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் தெம்பா பவூமா என்பவர்13 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக  25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்திருந்தார். மேலும் ஐபிஎலில், கடந்த சீசனில் ராபின் உதப்பா 10 தொடர்ச்சியான 25+ ரன்கள் எடுத்திருந்தார்.
 
மேலும் சூர்யகுமார் யாதவ் 14 இன்னிங்ஸ்களில் 640 ரன்கள் எடுத்து 71.11 சராசரியுடன் விளங்குகிறார். இது 600+ ரன்கள் எடுத்த வீரர்களில் விராட் கோலிக்கு (81.08 - 2016) அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த சராசரி ஆகும்.
 
சச்சின் 2010ஆம் ஆண்டு ஒரே சீசனில் 618 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சாதனையை முறியடித்து மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஒரே சீசனில் அதிகம் ரன்கள் எடுத்த வீரராகவும் சூர்யகுமார் யாதவ் மாறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments