Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் முடிவில் திடீர் திருப்பம்.. வரி உயர்வை 8 நாட்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்..!

Advertiesment
டொனால்டு டிரம்ப்

Mahendran

, திங்கள், 26 மே 2025 (10:09 IST)
ஒரு பெரிய திருப்பமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு விதிக்க திட்டமிட்டிருந்த 50% இறக்குமதி வரியை 8 நாட்களுக்கு தாமதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  
 
ஜூன் 1ல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த வரிகள், இப்போது ஜூலை 9 வரை தள்ளி வைக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவதற்கான கால அவகாசம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என டிரம்ப் தெரிவித்தார்.
 
இந்த அறிவிப்பு, ஐரோப்பியக் குழுமத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடனான  தொலைபேசி உரையாடலுக்கு பிறகு வந்தது. “நாங்கள் சரியான முறையில் பேச தயாராக இருக்கிறோம்” என லெயன் கூறியதாக  செய்தி வெளியிட்டுள்ளது.
 
“நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன், அவர்கள் பேச தயாராக இருக்க வேண்டும்,” என டிரம்ப் கூறினார். லெயனுடன் சீக்கிரம் சந்தித்து தீர்வு காண முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
 
ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 50% வரி விதிக்கவுள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் டிரம்ப்  எச்சரித்திருந்தார். வணிகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பேசவே விரும்பவில்லை, பேச்சுவார்த்தைகள் எங்கும் செல்லவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
 
இந்த வரிகள் ஜூன் 1ல் அமலுக்கு வரவிருந்தன. ஆனால் லெயனுடன் நடந்த அழைப்பு,  தற்போது  பதற்றத்தை தணித்துள்ளது.
 
லெயனுடன் பேசிய பின், ஜூலை 9க்கு பின் ஒரு முடிவு எடுக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!