Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவமனையில் ரெய்னா – 6 வாரத்துக்கு ஓய்வு !

மருத்துவமனையில் ரெய்னா – 6 வாரத்துக்கு ஓய்வு !
, திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:54 IST)
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் இன்னும் 6 வார காலத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அணியின் நடுவரிசை நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுரேஷ் ரெய்னா கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி ஒரு ஆண்டு ஆகிறது. இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அமெரிக்காவில் உள்ள ஆம்ஸ்டர்டாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையில் இருந்து அவர் மீண்டு வர 6 வார காலம் ஆகும் என்பதால் 2019-20 உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துலிப் கோப்பையில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பில்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் கில்லீஸ்