Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் சயனைடு வெடி வைத்து விலங்குகளைக் கொல்ல அனுமதி!

அமெரிக்காவில் சயனைடு வெடி வைத்து விலங்குகளைக் கொல்ல அனுமதி!
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (07:36 IST)
அமெரிக்காவில் காடுகளில் வாழும் அபாயகரமான ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை "சயனைடு வெடிகள்" பயன்படுத்தி கொல்லும் தற்போதைய நடைமுறையை தொடர அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


 
அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் காட்டு விலங்குகளுக்கு எதிராக முடிவெடுக்க கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
 
இந்த முறையில், கொல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட விலங்குகள் பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடித்து, வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.
 
இதில் பிரச்சனை என்னவென்றால், விவசாயிகள் மற்றும் காடுவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் விலங்குகளை பிடித்து நஞ்சை தெளித்து கொல்வதற்காக வைக்கப்படும் பொறிகளில் சில சமயங்களில் அபாயகரமற்ற விலங்குகளும், குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

webdunia

 
உதாரணமாக, விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறி ஒன்றில் 2017இல் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்றுக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அமெரிக்க அரசு குழந்தையின் பெற்றோருக்கு 1,50,000 டாலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அமெரிக்க அரசின் சேவை பிரிவுகளால் மட்டுமே பதிக்கப்படும் இதுபோன்ற பொறிகளில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கான காட்டு விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூர் தேர்தல்: நோட்டாவை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக