Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்

இந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்
, புதன், 23 ஜனவரி 2019 (12:26 IST)
இதுவரை கிரிக்கெட் போட்டி போதுமான வெளிச்சம் இன்றி உள்பட ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் முதல்முறையாக பேட்ஸ்மேன் முகத்திற்கு நேராக சூரிய வெளிச்சம் பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 

இன்று நடைபெற்று வரும் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
webdunia
இதனையடுத்து 158 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக சூரிய ஒளி பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்னும் ஒருசில நிமிடங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட முதல் போட்டி இதுதான் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி! பயப்படாமல் சவாலை சந்திக்க தயார்! விராட் கோலி பேடடி