Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா: இந்தியா போராடி தோல்வி!

Ind SA
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (20:37 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங் செய்த 68 ரன்கள் அடித்தார் 
 
இதனை அடுத்து 134 என்ற எளிய இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய நிலையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
கடைசி ஓவரில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டும் அடுத்த தென்னாப்பிரிக்க அணி அடுத்த 2 பந்துகளில் பவுண்டரிகளை அடித்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்.. வெற்றி யாருக்கு?