Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்.. வெற்றி யாருக்கு?

suryakumar yadav
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (18:10 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்.. வெற்றி யாருக்கு?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 134 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோலி, தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஸ்வின், ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் சுரேஷ் குமார் யாதவ் தனி ஆளாக நின்று 60 ரன்கள் எடுத்து இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்
 
இதனையடுத்து இந்திய பவுலர்களான அர்ஷ்தீப் சிங், ஷமி, புவனேஷ்குமார், அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் மாயாஜாலம் செய்து இந்த போட்டியை வெல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

49 ரன்களில் 5 விக்கெட்: தென்னாப்பிரிக்காவிடம் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!