Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

49 ரன்களில் 5 விக்கெட்: தென்னாப்பிரிக்காவிடம் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

india fans
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (17:14 IST)
49 ரன்களில் 5 விக்கெட்: தென்னாப்பிரிக்காவிடம் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
 
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தீபக் ஹூடா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய 5 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
 
தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்ஹ்டிக் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்து வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு உறுதியாக சென்று விடலாம் என்ற நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெதர்லாந்துக்கு எதிரான போட்டி: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!