Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தகவல்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:34 IST)
சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. கடைசி நேரத்தில் அதிரடியாக சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார். அவர் களமிறக்கப்பட்டதை அடுத்து மும்பை வீரர்களே ஆச்சரியமடைந்தனர். தோனி தான் அடுத்ததாக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது 
 
ஆனால் அவர் அதிரடியாக 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இலக்கை மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நிலையில் அவருடைய இடத்தை சாம் கர்ரன் சரியாக பூர்த்தி செய்துவிட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சாம் கர்ரன் மீது கேப்டன் தோனி அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் எனவேதான் அவரை சரியான நேரத்தில் களமிறக்கிவிட்டதாகவும், அவர் தொடர்ந்து ஆடும் 11 பேர் அணியில் இடம் பெறுவார் என்றும் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்து உள்ளார்
 
எனவே கடைக்குட்டி சிங்கம் என்று அழைக்கப்படும் சாம் கர்ரன் இந்த தொடர் முழுவதும் அணியில் இடம் பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments