Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவேன் – மூத்த வீரர் நம்பிக்கை !

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:14 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா தான் மீண்டும் அணிக்குத் திரும்பி உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் ராபின் உத்தப்பா. இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஏனோ தனக்கான இடத்தைப் பெற முடியாமல் தவித்தார். இப்போது 34 வயதாகும் இவர் மீண்டும் அணிக்குத் திரும்பி உலக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘இன்னமும் சாதிக்கவேண்டும் என்ற தீ என்னுள் இருக்கிறது. உலகக் கோப்பைப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது. அதற்குக் கடவுளின் ஆசி மற்றும் அதிர்ஷ்டம் முக்கியமானது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது எனச் சொல்லவே முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் உங்களுக்கே நியாயமாக இல்லை என்று அர்த்தம்.  இருக்கும் சிறிதளவு வாய்ப்பை நான் எதிர்பார்க்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments