Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு போக மிச்சம் இருந்தா குடுங்க! – ராகுல் காந்தி ட்வீட்!

இந்தியாவுக்கு போக மிச்சம் இருந்தா குடுங்க! – ராகுல் காந்தி ட்வீட்!
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:12 IST)
அமெரிக்க அதிபரின் வேண்டுகோளை தொடர்ந்து அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்ப இந்தியா அனுமதித்துள்ளது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகளவில் அதிகளவில் ஹைட்ராக்ஸிக்ளொரோகுயின் தயாரிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மருந்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் இந்தியாவின் சூழலை கருத்தில் கொண்டு மலேரியா மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எச்சரித்துள்ள ட்ரம்ப் ”ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ”நட்பு என்பது பதிலடி பொறுத்து அல்ல. இந்தியா கண்டிப்பாக அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும். மருந்துகளை அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அது இந்தியர்களுக்கு தேவையான அளவிற்கு இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கிற வெயில்ல 21 நாள்னா சும்மாவா..? காவலர்களுக்காக ஈபிஎஸ்!!