Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்: மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு

இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்: மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு
, ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:08 IST)
இங்கிலாந்து அணி 7 ரன்களுக்கு ஒரு விக்கெட்
கடந்த 13ம் தேதி ஆரம்பித்த இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக அவ்வப்போது தடைபட்டு வருகிறது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று நான்காவது நாளாக தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணி 236 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இன்றைய ஆட்டமும் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மொத்தமுள்ள ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் மழையால் அவ்வப்போது தடைபட்டு இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடிவடையவில்லை என்பதால் இந்த போட்டி டிரா என்பது உறுதி செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் – ரவி சாஸ்திரி