Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓய்வில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் – யுவ்ராஜ் சிங்குக்கு வாரிய அதிகாரி கோரிக்கை!

ஓய்வில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் – யுவ்ராஜ் சிங்குக்கு வாரிய அதிகாரி கோரிக்கை!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:32 IST)
ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் மீண்டும் பஞ்சாப் அணிக்காக விளையாடவேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரிய அதிகாரி புனீத் பாலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து ஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் புனீத் பாலி ‘உள்நாட்டுப்போட்டிகளிலாவது யுவ்ராஜ் சிங் மீண்டும் விளையாடவேண்டும். கடந்த 2 சீசன்களாக வீரர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். சண்டிகர், சத்திஸ்கர், இமாச்சல் என்று எங்கள் மாநில வீரர்கள் சென்று விடுகின்றனர். எனவே அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்க யுவ்ராஜ் சிங் வரவேண்டும். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2020… 29 வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை – ரசிகர்கள் அதிர்ச்சி!