Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி போராடி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி போராடி தோல்வி
, புதன், 6 நவம்பர் 2019 (21:53 IST)
கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகளை போல், கால்பந்தில் ஐஎஸ்எல் போட்டிகள் ரசிகர்கள் இடையே பெரும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணிகள் மோதின. இரு அணிகளும் சம வலிமையுடன் இருந்ததால் இரு அணி வீரர்களும் கோல் போட தீவிரமாக முயற்சித்தும் முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட போட முடியவில்லை 
இதனை அடுத்து இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தடுப்பு ஆட்டத்தை  கைவிட்டு ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கின. இதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டம் முடிவடைய வெறும் 4 நிமிடம் இருக்கும் நிலையில் அதாவது 86 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி ஒரு கோல் போட்டு அசத்தியது. இந்த கோலுக்கு பதில் கோல் போட ஐதராபாத் அணி தீவிரமாக முயற்சித்தும் கடைசிவரை முடியவில்லை என்பதால் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜாம்ஷெட்பூர்,மூன்றாவது இடத்தில் கொல்கத்தா, நான்காவது இடத்தில் கோவா மற்றும் ஐந்தாவது இடத்தில் மும்பை ஆகிய அணிகள் உள்ளன. ஒடிசா, பெங்களூரு, கேரளா, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் 6 முதல் 10 இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2020: வீரர்களின் ஏலம் தேதி அறிவிப்பு