Publish Date: Wed, 09 Jun 2021 (18:35 IST)
Updated Date: Wed, 09 Jun 2021 (18:43 IST)
நியுசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் மேட்ச வின்னராக இருப்பார் எனக் கூறியுள்ளார் மாண்ட்டி பனேசார்.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்ட்டி பனேசார் நியுசிலாந்து அணி இங்கிலாந்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடுகிறது. அதனால் இந்தியாவுடனான போட்டி சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும். நியுசிலாந்தில் அதிகமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அது அஸ்வினுக்கு சாதகமாக இருக்கும். அவர் இந்த போட்டியில் மேட்ச் வின்னராக இருப்பார் எனக் கூறியுள்ளார்.