Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதீஷ் வீரா மரணத்தால் பாதிக்கப்பட்ட படம்… மறுபடியும் ஷூட்டிங்கா!

நிதீஷ் வீரா மரணத்தால் பாதிக்கப்பட்ட படம்… மறுபடியும் ஷூட்டிங்கா!
, புதன், 9 ஜூன் 2021 (18:06 IST)
சமீபத்தில் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்கு சினிமாவில் முதல் முதலாக அடையாளம் தந்தது புதுப்பேட்டையில் அவர் நடித்த மணி கதாபாத்திரம்தான். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்றால் அது அசுரன் படம்தான். அதன் பின்னர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் சாணிக்காயிதம் படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது.

அந்த படத்தில் பாதிக் காட்சிகளில் நடித்திருந்த அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் வேறு நடிகரை வைத்து மறுபடியும் படப்பிடிப்பு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு படக்குழு ஆளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் பட கதாநாயகி வாய்ப்பு… இரண்டு தமிழ் நடிகைகள் இடையே போட்டி!