Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2020: அதிக தொகைக்கு ஏலம் போகவிருக்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2020: அதிக தொகைக்கு ஏலம் போகவிருக்கும் வீரர்கள் யார் யார்?
, வியாழன், 19 டிசம்பர் 2019 (14:21 IST)
ஐபிஎல் 2020 ஏலத்தில் அதிகத்தொகைக்கு ஏலம் போகவிருக்கும் ஏழு முக்கிய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் நாளை கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் தயாராகி வருகின்றன. 
 
மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. 
 
அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், கிறிஸ் லின், மிச்சேல் மார்ஷ், கம்மின்ஸ், ஹாசில்வுட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெய்ன், இலங்கைநின் மேத்யூஸ் ஆகிய 7 வீரர்கள் அதிகத்தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் இவர்களின் அடிப்படை விலையே ரூ. 2 கோடி ஆகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்ரிக் விக்கெட்டில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்..