Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா முழுவதும் பதற்றமான சூழ்நிலை – ஐபிஎல் ஏலம் நடக்குமா ?

கொல்கத்தா முழுவதும் பதற்றமான சூழ்நிலை – ஐபிஎல் ஏலம் நடக்குமா ?
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:42 IST)
இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடக்க இருப்பதாக இருந்த நிலையில் அது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப் பட்டதை அடுத்து  மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மம்தா பானர்ஜியும் தெருக்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏலத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர்ந்து பதற்றம் நீடிக்குமாயின் வேறு இடத்துக்கோ அல்லது வேறு தேதிக்கோ மாற்றப்படும் என சொல்லப்படுகிறது. கங்குலி பிசிசிஐ தலைவராக ஆனபின்னர் நடக்கும் முதல் ஏலம் என்பதால் கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நாங்கள் ஏன் குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம்?” ஜெயகுமார் விளக்கம்