Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவுட் ஆகாமலே அவுட்டான ரோஹித் சர்மா? – ரசிகர்கள் கொந்தளிப்பு

அவுட் ஆகாமலே அவுட்டான ரோஹித் சர்மா? – ரசிகர்கள் கொந்தளிப்பு
, வியாழன், 27 ஜூன் 2019 (18:23 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அவுட் ஆகாத நிலையில் அவருக்கு அவுட் கொடுத்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க வீரரான ரோகித் ஷர்மா அதிகமான ரன்கள் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 18 ரன்களில் அவுட் ஆனார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்கெட் விழுந்ததும் நடுவர்கள் அது விக்கெட் இல்லை என்றே கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்து மட்டையில் உரசியபடி, பேடில் பட்டு போனது. எனினும் இதை மூன்றாவது நடுவர் விக்கெட் என அறிவித்தார். ஆனால் அது அவுட் இல்லை. நடுவர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு துணைபோகிறார்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாறு படைத்த கோலி:புதிய சாதனை