Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (13:39 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் சம பலத்துடன் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி இந்தியா வருவதற்கு முன் வங்கதேச அணியுடன் விளையாடி சற்று ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மணன், இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்து ஒருநாள் தொடரை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார். கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 வருடத்தில் 150 முறை பாலியல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்