வரலாற்று சிறப்புமிக்க மகளிர் உலகக்கோப்பை 2025 வெற்றியை தொடர்ந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடத் தயாராகியுள்ளது.
அரசியல் பதற்றம் காரணமாக வங்கதேச தொடர் ரத்தானதை தொடர்ந்து, இந்த இலங்கை தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து திருவனந்தபுரத்தில் டிசம்பர் 26, 28, மற்றும் 30 ஆகிய தேதிகளில் இறுதி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை 2026 ஆகும். 2026 உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி மோத உள்ளது. இந்த தொடர்கள், டி20 உலகக் கோப்பைக்கான அணி தயாரிப்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.