Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

Siva
ஞாயிறு, 29 ஜூன் 2025 (07:28 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நேற்று நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமாக 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி சதமடித்தார்.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 112 ரன்களும், ஹர்லின் தியோல் 43 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து, 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட, அந்த அணி 14.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனை அடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அடுத்த கட்டுரையில்
Show comments