Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (14:38 IST)
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவித்தது. இந்திய அணி 292 ரன்கள் குவித்தது. அதுவும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய தப்பியது.
 
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் மற்றும் தொடக்க வீரரான குக் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 4வது நாளான இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி தோல்வி அடையும் அல்லது இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள்… கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments