Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:44 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம் செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.
 
மேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.  
இதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா  6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments