பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Mahendran
வெள்ளி, 14 நவம்பர் 2025 (14:59 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இன்று காலை டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த நிலையில், ஆரம்பத்திலிருந்தே இந்தியப் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வந்தனர். குறிப்பாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா2 விக்கெட்டுக்களையும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பக்கபலமாக இருந்தனர்.
 
இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் மார்க்கம் 31 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய இருக்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த ஆடுகளத்தில் எப்படி ரன்களை குவிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments