Webdunia - Bharat's app for daily news and videos

Install App

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

Mahendran
வெள்ளி, 22 நவம்பர் 2024 (15:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த் நகரில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ஆனால், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுலபமாக ஆட்டமிழந்த நிலையில், நிதிஷ்குமார் ரெட்டி மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. பும்ராவின் அபார பந்துவீச்சின் காரணமாக, ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ராணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியா வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா இன்னும் 91 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய ஆட்ட நேர முடிவுக்குள் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பவுலர்களின் சிறப்பான பதிலடி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments