Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (14:20 IST)
பெர்த்தில் தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ஆஸி வேகப்பந்து தாக்குதலில் நிலைகுலைந்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ஆஸி அணி தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. ஆஸி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை பும்ரா அவுட்டாக்கி டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்தார். தற்போது ஆஸி அணி 4 விக்கெட்களை இழந்து 33 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறார். பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலியை சீண்டும் விதமாக ஆஸி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியது குறித்து ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பும்ராவிடம் “ஒரு மித வேகப்பந்து வீச்சாளரான நீங்கள் இந்திய அணியை வழிநடத்துவதை எப்படி உணர்கிறீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு பும்ரா பொறுமையாக ‘நான் 150 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடியவன். அதனால் நீங்கள் என்னை வேகப்பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார். அந்த கேள்விக்கான பதிலை இப்போது பெர்த் டெஸ்ட்டில் தனது பந்தின் மூலமாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments