Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

சதம் மழை பொழிந்த இந்தியா; 610 ரன்களுக்கு டிக்ளேர்

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 26 நவம்பர் 2017 (16:09 IST)
முரளி விஜய், புஜாரா, கோலி, ரோகித் சர்மா என தொடர்ந்து இரண்டு நாட்களாக சதம் மழை பொழிந்த இந்திய அணி 610 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.


 
இலங்கை இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டு நாட்கள் விளையாடியது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது.
 
இதையடுத்து இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் விளாசினர். இன்று கோலி இரட்டை சதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது பங்குக்கு சதம் விளாசினார்.
 
இந்திய அணியில் மூன்று சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். இப்படி சதம் மழை பொழிந்த இந்திய அணிக்கு இன்னிங்ஸை வெற்றிப்பெற அதிகளவில் வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத் கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நெருங்குகிறது இந்தியா