தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

Siva
புதன், 10 டிசம்பர் 2025 (08:25 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார்.
 
இதனை அடுத்து, 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது பந்திலேயே குவின்டன் டி காக் அவுட் ஆக, அதன் பிறகு மலமளவென விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.
 
12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 74 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா எடுத்தது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சண்டிகர் மைதானத்தில் நாளை நடைபெறும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments