Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (18:07 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 உதவியாளர்கள் மற்றும் ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலை நீட்டித்து ஐபிஎல் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 போட்டிகளில் 500 விக்கெட்கள் – சாதித்த ஜாம்பியன் வீரர்!